ஆண்டு 5 Question Preview (ID: 41445)


உவமைத்தொடர். TEACHERS: click here for quick copy question ID numbers.

9. இலைமறை காய் போல எனும் உவமைத்தொடரின் பொருள் __________ வெளிப்படாமல் மறைந்திருத்தல் ஆகும். மேற்காணும் வாக்கியத்தில் விடுபட்டச் சொல்லைத் தெரிவு செய்க.
a) நெய்
b) தேங்காய்
c) ஆற்றல்
d) ஓடும் திறன்

10. குணா ____________________________________ அனலில் இட்ட மெழுகு போல துன்பத்தில் மன உருகினான். மேற்காணும் வாக்கியத்தில் இருக்கும் உவமைத்தொடருக்கு ஏற்ற எம்மாதிரியான சூழல் அமைந்திருக்கும் என்பதனைத் திர்வு செய்க.
a) பறவைகள் சுதந்திரமாகப் பறக்கும் பறவைகளைப் பார்த்து
b) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் தாயின் நிலையைக் கண்டு
c) தம்பி தங்கைகள் விளையாடிக் கொண்டிருப்பதை நினைத்து
d) உணவைச் சுவைத்தப்பின்

8. குன்றின் மேலிட்ட விளக்குப் போல எனும் உவமைத்தொடரின் பொருளைத் தெரிவு செய்க.
a) எல்லாராலும் அறியப்பட்ட உண்மை
b) திறமை மறைந்திருத்தல்.
c) சிலரால் அறியப்பட்ட திறமை
d) எல்லாராலும் அறியப்பட்ட உணரப்பட்ட ஒருவரின் திறமை

7. அனலில் இட்ட மெழுகு போல எனும் உவமைத்தொடரின் பொருளை விளக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a) சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாலினி அனலில் இட்ட மெழுகு போல இன்பத்தில் மூழ்கினாள்.
b) குமரன் தன் தங்கை விழுந்ததைப் பார்த்தவுடன் அனலில் இட்ட மெழுகு போல ஓடினான்.
c) தனது பாட்டியின் பிரிவினால் முருகன் அனலில் இட்ட மெழுகு போல துன்பத்தால் துடிதுடித்து போனான்.
d) அண்ணனின் நிலையைக் கண்ட கண்ணன் அனலில் இட்ட மெழுகு போல அழுதான்.

6. கவிந்தன் இலைமறை காய் போல தனது ஆற்றலை வெளிப்படுத்தாமல் வகுப்பில் அமைதியாக இருப்பான். மேற்காணும் வாக்கியத்தில் இந்த உவமைத்தொடரின் பொருளை விளக்கும் குறிப்புச் சொல்லைத் தெரிவு செய்க.
a) ஆற்றல்
b) வெளிபடுத்தாமல்
c) ஆற்றல் வெளிபடுத்தாமல்
d) அமைதியாக

5. குன்றின் மேலிட்ட விளக்கு போல எனும் உவமைத்தொடரின் பொருளை விளக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a) கலைவாணி பாடல் திறன் போட்டியில் பாடியதால் அவளது திறமை குன்றின் மேலிட்ட விளக்கு போல அனைவருக்கும் தெரிந்தது.
b) கலைவாணி பாடல் திறன் போட்டியில் பாடியதால் குன்றின் மேலிட்ட விளக்கு போல அனைவருக்கும் தெரிந்தது.
c) கலைவாணியின் திறமை குன்றின் மேலிட்ட விளக்கு போல தெரிந்தது.
d) கலைவாணி பாடல் திறன் போட்டியில் பாடியதால் குன்றின் மேலிட்ட விளக்கு போல தெரிந்தது.

4. விலையுயர்ந்த கைத்தொலைப்பேசி உடைந்தவுடன் சுஜா அனலில் இட்ட மெழுகு போல கவலையினால் மனம் உருகினாள். மேற்காணும் வாக்கியத்தில் இந்த உவமைத்தொடரின் பொருளை விளக்கும் குறிப்புச் சொல்லைத் தெரிவு செய்க.
a) விலையுயர்ந்த
b) கவலையினால் மனம் உருகினாள்.
c) கவலை
d) மனம் உருகினாள்

1. அனலில் இட்ட ____________ போல எனும் உவமைத்தொடரில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க.
a) மெழுகு
b) பல்
c) உணவு
d) பழம்

2. ஆற்றல் வெளிபடாமல் மறைந்திருத்தல் எனும் பொருளுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
a) சிலை மேல் எழுத்துப் போல
b) எலியும் பூனையும் போல
c) சூரியனைக் கண்ட பனி போல
d) இலை மறை காய் போல

3. குன்றின் மேலிட்ட விளக்கு போல எனும் உவமைத்தொடரின் பொருளைத் தெரிவு செய்க.
a) எல்லாராலும் அறியப்பட்ட உணரப்பட்ட ஒருவரின் திறமை
b) துன்பத்தால் மனம் உருகுதல்.
c) ஆற்றல் வெளிபடாமல் மறைந்திருத்தல்
d) மிகவும் பாதுகாப்பாக

Play Games with the Questions above at ReviewGameZone.com
To play games using the questions from above, visit ReviewGameZone.com and enter game ID number: 41445 in the upper right hand corner or click here.

TEACHERS / EDUCATORS
Log In
| Sign Up / Register